சோழர் காலத்து சுயம்புலிங்க சிவன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில் சோழர் காலத்து சுயம்புலிங்க சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவன் சன்னதியில் உள்ள நந்தி பெருமானுக்கு பால், தயிர் மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 
இதைத்தொடர்ந்து சுயம்பு லிங்க சிவபெருமான் அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்த பக்தர்கள் சிவசிவஹரஹர கோஷத்துடன்,
சிவபெருமானை காளை வாகனத்தில் எழுந்தருளச் செய்து மூன்று முறை பிரகார விழாநடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நந்தியம் பெருமானுக்கு மகா தீபம் காட்டப்பட்டது. 
இதேபோல் திருவுடையார்பட்டி திருமூலநாதர் திரிபுர சுந்தரி அம்பாள் கோவில், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் மங்கள நாயகி அம்பாள் கோவில்,  
திருமலைராய சமுத்திரம் கதிர் காமேஸ்வர கதிர் காமேஸ்வரி அம்பாள் கோவில், பாலையூர்பழங்கரை புராதன ஈஸ்வரர கோவில், விஜய ரெகுநாதபுரம் மணியம்பலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *